மாரடைப்பினால் காலமான இந்திய மூத்த இராஜதந்திரி சுஷ்மா சுவராஜின் பூதவுடலுக்கு இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச வர்த்தக உபாயமார்க்க அமைச்சர் மலிக் சமரவிக்ரம இன்று புதன்கிழமை நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடன் சுஷ்மா சுவராஜின் பூதவுடலுக்கு இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.