ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான புதிய அரசியற் கூட்டணி அமைப்பது பற்றிய மற்றுமொரு தீர்க்கமான கலந்துரையாடல் அடுத்தவாரம் செவ்வாக்கிழமை நடைபெறவுள்ளது.
அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்கின்ற அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,
நாங்கள் இருதரப்பினரும் இணைந்து கூட்டணி அமைப்பதற்கான தீர்மானத்திற்கு வந்துள்ளோம். காணப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டோம். அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நாங்கள் மீண்டும் சந்திப்பதோடு இந்த மாத இறுதியில் எமது கூட்டணியை வழங்குவோம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்ற அனைவரும் இந்தப் பேச்சில் கலந்துகொள்வார்கள் என்று குறிப்பிட்டார்.