சஜித்திற்கு ஆதரவான 50 பேர் முக்கியத் தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள், அந்தக் கட்சியின் பிரதித் தலைவ்ர, சஜித் பிரேமதhஜவிற்கு ஆதரவான 50ற்கும் மேற்பட்ட நாடாளளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றக் குழு மற்றும் செயற்குழுவின் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளனர்.

குறித்த உறுப்பினர்களின் கையொப்பங்கள் அடங்கிய கடிதத்தை பிரதமரும், கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்து, உடனடியாக இந்தக் கூட்டங்களை நடத்தி, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கவுள்ளதாக, கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். .

இந்த கடிதம் அடுத்த வாரம் கட்சியின் தலைவருக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

கட்சியின் தலைவரான ரணில், பிரதித் தலைவரான பிரேமதாச மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு கட்சிக்குள் தனித்தனியே ஆதரவுகளும் எதிர்ப்புகளும் காணப்படுகின்ற நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

You May also like