பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையே பொதுவான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 06ம் திகதி குருநாகலையில் சஜித் அணியினர் நடத்தவிருந்த மக்கள் கூட்டமும் இந்த இணக்கப்பாட்டிற்கு அமைவாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
நேற்று மாலை அலரிமாளிகையில் நடந்த விஷேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் எதிர்வரும் 06ம் திகதி கட்சியின் முக்கியஸ்தர்கள் கூடி பேசவுள்ள நிலையில் அதுவரை பிரதமருக்கு சஜித் அணி அவகாசம் கொடுத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.