விவாதம் நடத்திய பின்னர் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கோரிக்கையை முன்வைக்கும் வரப்பிரசாரம் சபை முதல்வருக்கே இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
10 நிமிட ஒத்திவைப்புக்குப் பின்னர் மீண்டும் கூடிய நாடாளுமன்றத்தில் அறிவிப்பை விடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய இதனைக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நீங்கி நாடாளுமன்றம் வழமைக்குத் திரும்பியது.