கோட்டாவுக்கு எதிராக விரைவில் புதிய வழக்கு?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சிவில் அமைப்பொன்று நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய 2005ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்ததாகவும் ஆனால் அப்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர் இடாப்பில் அவரது பெயர் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனினும் அவரது பெயரை சட்டவிரோதமாக அன்றைய வாக்காளர் இடாப்பில் சேர்த்திருப்பதாக கூறியே நீதிமன்ற நடவடிக்கையை சிவில் அமைப்பொன்று மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இரகசிய பொலிஸார் ஏற்கனவே விசாரணை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like