தெரிவுக்குழு முன் கை கைழுவினார் மைத்திரி:சாட்சியம் இதோ!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட உள்ளதாக எந்தவொரு புலனாய்வு தகவலும் தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியிடம் நேற்று மூன்று மணிநேர வாக்குமூலத்தை உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு பதிவு செய்தது.

இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு சாட்சியம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் குறித்து கிடைத்த புலனாய்வு தகவல்களை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தனக்கு தெரிவிக்கவில்லை என்பதால் அவர்களே இதற்கு பொறுப்பாளி என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

You May also like