புத்தளம் – முந்தல், பள்ளிவாசல்பாடு கடற்கரையில் டொல்பின் மீன் இறந்த நிலையில் கரையொதுங்கியிருக்கிறது.
இந்த மீன் இறந்த நிலையில் இன்று புதன்கிழமை அதிகாலை இவ்வாறு கரையொதுங்கியதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மீனின் உடலில் சிறு காயங்களும் காணப்பட்டுள்ளன.
மீன்பிடி நடவடிக்கைக்குச் செல்லும் ஒருசில மீனவர்கள் டொல்பின் மீன்கள் மீது தடிகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவதே இதற்குக் காரணம் என மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.