ஓய்வுபெற்ற மற்றும் அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவ வீரர்கள் கடந்த 20 நாட்களாக கொழும்பு புறக்கோட்டையில் நடத்திவந்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஓய்வூதிய விவகாரத்தை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் இன்று தனித்தனியாக சென்று அவர்களை சந்தித்துள்ளனர்.
இதனையடுத்து தற்காலிகமாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை அவர்கள் கைவிட்டுள்ளனர்.