குமார வெல்கம அதிரடி அறிவிப்பு:இன்று இரவு வெளியிடுவார்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தனக்கு போட்டியிட இன்று அங்கீகாரம் கிடைக்காவிட்டால் தனித்து போட்டியிடப் போவதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடுகின்றது.

இதன்போது ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதா என்கிற இறுதி முடிவு எடுக்கப்படும்.

இந்நிலையில், தனது சார்பில் யோசனை ஒன்றை சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை தாம் செய்திருப்பதாக தெரிவித்த குமார வெல்கம, அனுமதி கிடைக்காவிட்டால் தனித்து போட்டியிடவதாகவும் கூறினார்.

You May also like