கோட்டாவிடம் இருந்து காப்பாற்றுங்கள்: CID இல் முறைப்பாடு!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் இலங்கை குடியுரிமையை சவாலுக்கு உள்படுத்தி மனுதாக்கல் செய்த சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் காமினி வியாங்கொட மற்றும் சந்திரகுப்த தேனுவர ஆகியோரே இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த பின்னர் தங்களுக்கு அவரிடம் இருந்து உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் அவர்கள் கூறியுள்ளனர்.

You May also like