ஜனாதிபதி தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையே சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு
இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று இடம்பெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டடானும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸூம் குறித்த உடன்படிக்கையில்
கைச்சாத்திட்டனர்.
நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் இரு கட்சி சார்ந்த
உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.