நாட்டை உலுக்கும் அறிவிப்பை விடுக்கவுள்ள மைத்திரி!

ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டுக்கு விஷேட அறிவுப்பொன்றை வெளியிடத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

அரசியல் அரங்கில் பரவலாகப் பேசப்பட்ட கருத்துப்படி, இது பல அரசியல்வாதிகள், தற்போதைய மற்றும் தற்போதைய அரசாங்க பிரமுகர்களுக்கு அதிர்வை விளைவிக்கும் ஒரு அறிக்கையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் இந்த மாதம் 16 ஆம் திகதி நடைபெறும்.

அதன்படி, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவுக்கு வரவுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் செய்யும் இறுதி நாடாளுமன்ற உரையை வழங்குவார்.

கடந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது மோசடி , ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும், பினைமுறி மோசடி குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும் ஜனாதிபதியிடம் உள்ளது.

அந்த அறிக்கைகளை ஜனாதிபதி இன்னும் வெளியிடவில்லை.

இந்த அறிக்கைகளை வெளியிட ஜனாதிபதிக்கு இருப்பது இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளன.

மேலும், மரண தண்டனையை மீண்டும் ஒருமுறையாவது மேற்கொள்வதற்கான தனது முயற்சியை ஜனாதிபதி இதுவரை கைவிடவில்லை.

மரண தண்டனைக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு விடுத்துள்ளதுடன், அதை நீட்டிக்கலாமா என்பது குறித்து எதிர்வரும் 30ம் திகதி உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும்.

அண்மையில் நடந்த கூட்டத்தில் மரண தண்டனையை எப்படியாவது செயல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பை விடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like