முத்தையா முரளிதரனுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு நாடாளுமன்றத்தில் பாரிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டபோது முத்தையா முரளிதரன் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பணத்திற்காக விளையாடிக் கொண்டிருந்ததாக மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

முத்தையா முரளிதரன் தற்போது ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரான ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like