கோட்டாபயவை கொலை செய்வதாக நான் கூறவில்லை: பௌசி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்யப் போவதாக நான் கூறியதாக தனியார் ஊடகமொன்றில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என்று சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார்.

கொழும்பு – பாலத்துறையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய வேண்டும் என்று ஏ.எச்.எம் பௌசி கூறியதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பௌசி, அவ்வாறு தாம் கூறவில்லை என்றும், குறித்த தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் கூறினார்.

You May also like