வானொலி அறிவிப்பாளருக்கு கொழும்பில் அச்சுறுத்தல்!

இலங்கை தனியார் வானொலியொன்றின் பிரபல அறிவிப்பாளரான லங்கேஷ்வரனுக்கு (லங்கேஷ்), அடையாளம் தெரியாத நபர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்,

அலுவலகத்திலிருந்து வீடு நோக்கி நேற்றிரவு சென்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிருலபனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரபல அறிவிப்பாளர் லங்கேஷ் சென்ற வாகனத்தை, காரொன்றில் வந்த சிலர் இடைமறித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, காரிலிருந்து இருவர் இறங்கி, தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்தார்.

இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தவர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You May also like