ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க இன்று மாலை விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார்.
கட்சியிலிருந்து கொண்டே பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரிலும், கடந்த வருடத்தில் ஏற்பட்ட சூழ்ச்சி ஆட்சிபுரள்வுக்கு ஆதரவளித்த காரணத்திற்காகவும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
எனினும் அவருக்கு இதுகுறித்த உத்தியோகபூர்வ கடிதத்தை விரைவில் அனுப்பிவைப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.