தபால்மூல வாக்குச்சீட்டுக்களை அரச ஊழியர்கள் புகைப்படம் எடுத்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கும் நடவடிக்கையானது சட்டவிரோதமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார்.
அவ்வாறு தபால்மூல வாக்குச்சீட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கப்படுமாயின், அவர்களுக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.