இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ளதாக கூறப்படும் மில்லேனியம் சவால் உடன்படிக்கைக்கு எதிராக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
‘எம்.சி.சி ஒரு புற்றுநோய்’ என்றும் ‘அமெரிக்கா, எங்களை விட்டு விடுங்கள்’ என்றும் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இன்று புதன்கிழமை முற்பகலில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.