அவசரமாக நாளை சஜித்தை சந்திக்கிறார் மைத்திரி: முடிவுகள் மாறலாம்?

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு பெரும்பாலும் கொழும்பில் நடைபெறலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதற்கு முடிவு செய்திருந்தாலும் ஜனாதிபதி மைத்திரி, சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 05 நாட்களே இருக்கின்ற நிலையில், நாளை நடைபெறவுள்ள சந்திப்பின் பின்னர் ஜனாதிபதியின் முடிவில் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

You May also like