ரணிலின் பாதுகாப்பு திடீர் குறைப்பு; சஜித்திற்கு மாற்றம் இல்லை!

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சிலரது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களான திலக் மாரப்பன, மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட சிலருக்கு வழங்கப்பட்ட விஷேட அதிரடிப்படை பாதுகாப்பு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதுகாப்புகளை அதிகரிக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like