முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயணித்த வாகனம் மீது இன்று மாலை கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் புத்தளம் முந்தல் – மதுரங்குளி என்ற பிரதேசத்தில் வைத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வாகனத்திற்கு சிறுசேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக முந்தல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.