திருகோணமலை, கிண்ணியா- உப்பாறு பகுதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
உப்பாறு பிரதேசத்தில் மகாவலி கங்கையில் 05 பேர் பயணித்த படகு இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
இதன்போது இருவர் நீந்தி கரையை அடைந்ததுடன், ஒருவர் மூழ்கி பலியானார்.
காணாமல் போன இருவரை தேடும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்.