டெலிகொம் தலைவராக சமல் ராஜபக்சவின் புதல்வர்?

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவர் பதவிக்கு ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

இவர், முன்னாள் சபாநாயகரும் தற்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்சவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான குமாரசிங்க சிறிசேன பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like