மருத்துவர் ஷாபியிடம் மீள்விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் ஷாபி விவகாரம் பற்றி விசாரணை மேற்கொள்ள புதிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

குருநாகல் வைத்தியசாலைக்கு மகப்பேற்றுக்கான வந்த பல தாய்மார்களை அவர்களது விருப்பமின்றி கருத்தடை சத்திரசிகிச்சையை மேற்கொண்ட குற்றச்சாட்டை அந்த வைத்தியசாலையின் மருத்துவர் மொஹமட் ஷாபி எதிர்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை குருநாகல் நீதிமன்றில் இன்று இடம்பெற்றபோது அதில் மருத்துவர் ஷாபியும் ஆஜராகினார்.

இந்நிலையில், மருத்துவர் ஷாபியிடம் இருந்து மீள்விசாரணையை தொடங்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

You May also like