இலங்கையில் மீண்டும் தாக்குதலா? அமெரிக்கா விடுக்கும் எச்சரிக்கை!

இலங்கைக்கு விஜயம் செய்யும் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

எதிர்வரும் விடுமுறை நாட்களுக்கு சார்ந்ததாக இந்த பயண எச்சரிக்கை அமைந்துள்ளது என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்யும் இடங்கள், பொதுப் போக்குவரத்துக்கள், சந்தை, மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள், விமான நிலையங்கள், கல்வி நிலையங்கள் உட்பட பல இடங்களைச் சுட்டிக்காட்டி குறித்த பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்கிற எச்சரிக்கையை அமெரிக்கா பிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையில் தற்போது இருக்கும் அமெரிக்கர்கள் மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்ய நினைக்கும் அமெரிக்கர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

US EMBASSY – https://lk.usembassy.gov/security-alert-u-s-embassy-colombo-sri-lanka-10/

You May also like