ரூமி மொஹமட்டின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!

வெள்ளை வேன் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான ரூமி மொகமட்டின் பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்தவாரம் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரூமி மொஹமட் சார்பில் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எனினும் பிணை கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

You May also like