கினிகத்தேனை – தியகல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை 7.30 அளவில் இடம்பெற்றிருப்பதாக கினிகந்தேனை பொலிஸார் குறிப்பிட்டனர்.
காயங்களுக்குள்ளாகிய அனைவரும் வட்டவளை, நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் ஹட்டனிலிருந்து கண்டிநோக்கி சென்ற தனியார் பஸ்ஸ{ம், கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸ{ம் நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.