இராஜாங்க அமைச்சரின் சாரதி கைது:30ஆம் திகதிவரை விளக்கமறியல்!

வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் சாரதியை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுராதபுரம் – புத்தளம் வீதியில் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் கடந்த 16ஆம் திகதி இராஜாங்க அமைச்சரின் வாகனம் மோதியதில் குடும்பஸ்பர் பலியாகியதோடு அவரது மனைவியும், மகனும் படுகாயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அமைச்சரின் சாரதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டது.

You May also like