ரஞ்ஜன் சபையில் அதிரடி :மஹிந்தவின் குரல் பதிவும் இருக்கிறதாம்!

VIDEO ; https://youtu.be/9iRpy9pU954

தன்னுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் குரல் பதிவுகளும் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இருக்கும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உட்பட பலருடைய குரல் பதிவுகளும் தன்னிடம் இருப்பதாகவும் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டால் முன்னிலையாகி கோப்புக்கள் வீதம் முன்வைத்து சாட்சியமளிக்கத் தயார் என்றும் அவர் கூறினார்.

சில சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் வெளியிடாத அரசாங்கத்தைப் பாதிக்கின்ற பல குரல் பதிவுகளும் தன்னிடம் இருப்பதாகவும் அவை தற்போது வெளிநாடுகளில் பாதுகாப்பு பெட்டகங்களில் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நேரம் கனியும்போது அம்பலப்படுத்துவதாகவும் தெரிவித்த ரஞ்ஜன் ராமநாயக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குரல் பதிவு தன்னிடம் இல்லை என்றும் கூறினார்.

இதேவேளை அரசாங்கத்தில் இருக்கும் பலர் தனக்கு ஒற்றன் வேலையை பார்த்துக்கொண்டிருப்பதையும் நாடாளுமன்றில் இன்று கூறினார்.

சில அமைச்சர்களின் மனைவிமார் தன்னுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும், தனது கணவர் இன்னுமொரு அமைச்சரது மனைவியை திருமணம் செய்ததாகவும், பிரதமர் ஆகின்ற யோகம் இருப்பதாக ஜோதிடர்கள் வழங்கிய ஆலோசனையின்படி அவ்வாறு செய்ததாக மனைவிமார் தன்னிடம் கூறியதாகவும் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்தார்.

You May also like