தகுதியானவர்களை தெரிசெய்யுமாறு கோரிக்கை!

அரசியலுக்கு உகந்ததாக நபர்களை மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவுசெய்யக்கூடாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

அநுராதபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான துமிந்த திஸாநாயக்க எம்.பி இதனைக் கூறினார்.

ஏப்ரலில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் ஊடாக தகுதியானவர்களை மக்கள் தெரிவுசெய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க, பொதுத் தேர்தலின் பின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கம் உருவாக்கப்படும் என்றார்.

You May also like