உண்மையை விளக்கி அசாம் அமீன் அறிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நடத்தியதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் மற்றும் அதனால் ஏற்பட்ட சேவை விலகல் குறித்து பி.பி.சி செய்திச்சேவையின் முன்னாள் ஊடகவியலாளர் அசாம் அமீன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தனது முகநூலில் அவர் விளக்கத்தை பதிவிட்டுள்ளார்.

ஊடகத்துறையில் தாம் பல அரசியல்வாதிகள் உடன் தொலைபேசி மற்றும் நேர்காணகளை நடத்தியிருக்கிற போதிலும் அவை ஊடகவியலுக்காக மாத்திரமே என்று அசாம் அமீன் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட நோக்கத்திற்கு அல்ல என்று கூறியுள்ள ஊடகவியலாளர் அசாம் அமீன், 2015ம் ஆண்டில் இருந்து ரஞ்சன் ராமநாயக்கவுடன் எந்தவொரு நேர்காணலையும் தாம் நடத்தவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

You May also like