கொரோனா வைரஸ் அச்சத்தினால் சீனாவிலிருந்து நாடு திரும்பிய 50 இலங்கை மானவர்களுக்கு முறையான பரிசோதனை நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று வந்தடைந்த 50 மாணவர்களுக்கு சாதாரண மருத்துவ பரிசோதனையே நடத்தப்பட்டதாக விமான நிலைய மருத்துவ பிரிவின் மருத்துவர் சந்திக்க பண்டார தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுகின்றன நிலையில் சீனாவில் இருந்து வந்த மாணவர்களுக்கு முறையான முழுமையான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்நிலையில் இன்றும் சீனாவிலிருந்து 200 மாணவர்கள் இலங்கை திரும்பவுள்ளனர்.