கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கை உட்பட 18 நாடுகளில் உள்ள நிலையில் சீன நாட்டவர்களுக்கு அந்தந்த நாடுகள் பலவித வீசா கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றது.
இந்நிலையில் கொழும்பிலுள்ள உணவகம் ஒன்று சீனர்களுக்கு புதுக்கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதாவது, சீனப் பிரஜைகளுக்கு உணவு வழங்கப்படாது என்கிற அறிவித்தல் பலகை அந்த உணவகத்தின் நுழைவாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.