தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி தொடக்கம் 1000 ரூபா நாட்சம்பளத்தை வழங்க இணக்கம் வெளியிட்டிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.
கேள்விக்கு பதிலளித்த பிரதமர், மேற்படி தகவலை வெளியிட்டிருக்கின்றார்.