கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஓய்வு பெறவுள்ளார்.
எதிர்வரும் 15ம் திகதி அவர் தனது ஓய்வு பெறும் முடிவை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து அவர் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.