90 ஆசனங்களில் ஆட்சியை அமைப்போம்: ரணில் அணி அறிவிப்பு!

வருகின்ற பொதுத் தேர்தலில் 90 ஆசனங்கள் கிடைத்தாலே புதிய அரசாங்கத்தை உருவாக்குவோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், தற்போதைய அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தி கொள்ளத் தொடங்கிவிட்டதாகவும், பொதுத் தேர்தலில் மக்கள் விழிப்புடன் சரியானவர்களைத் தெரவுசெய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் கூட்டணிச் சின்னம் குறித்த நெருக்கடி இன்னும் ஓரிரு தினங்களில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May also like