எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.
எகிப்து நாட்டின் மிக முக்கியமான காலப்பகுதிகளில் ஜனாதிபதியாக பதவிவகித்து சிறந்த முறையில் நாட்டை மூன்று தசாப்தங்களாக ஆட்சிசெய்த பெறுமையை பெற்;றுள்ள முபாரக், 2017ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனநாயகவாத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரையும் கொன்று குவித்த குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.
இதில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் தனது 91ஆவது வயதில் இன்று இயற்கை எய்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.