சில மணிநேரத்தில் நாடாளுமன்றம் கலையும்: அரசாங்கம் அறிவிப்பு!

இன்னும் சில மணிநேரங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு நல்கின்ற நாடாளுமன்றத்தை அமைப்போம் என்றும் அவர் சவால் விடுத்தார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பு முன்வைத்து வரும் தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனையையும் அவர் இன்று நிராகரித்தார்.

You May also like