ஸ்ரீகொத்தவுக்கு அருகில் போட்டியாக அலுவலகம் திறக்கும் சஜித்!

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனிவழிப் பயணத்தை நேற்று தொடங்கியதால் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவடைந்திருப்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

இந்நிலையில் சஜித் பிரேமதாஸ ஐக்கிய மக்கள் சக்தி பொது எதிரணியினர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையமான ஸ்ரீகொத்தவுக்கு அருகாமையிலேயே அலுவலகம் ஒன்றை திறந்துள்ளனர்.

ஏட்டிக்குப் போட்டியான சஜித் பிரேமதாஸவின் இந்த செயற்பாடானது ஐக்கிய தேசியக்கட்சியிலுள்ள பலருக்கும் பெரும் ஆத்திரத்தை மூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நாளை புதன்கிழமை சுபவேளையில் தனது அலுவலகத்தை திறந்து வைக்கின்றார் சஜித்.

You May also like