கட்டாய விமுறை அளிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர எதிர்வரும் 14ஆம் திகதி பணியிலிருந்து ஓய்வில் செல்லவுள்ள நிலையில், புதிய பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கான இணக்கப்பாடு இன்று புதன்கிழமை முற்பகல் நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைந்த பின் முதலாவது அமைச்சரவை சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகலில் நடைபெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிவருகின்ற சந்தன விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக அவருடைய பெயரை அரசியலமைப்புச் சபைக்கு முன்மொழியவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, பொதுத் தேர்தல் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.