வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்கத் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்புக்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வருவோர் அரசியல் நோக்கத்திற்காக கன்னியமாக மதிக்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது தங்களை ஒருவிதமாக அரசாங்கம் பார்ப்பதாகவும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர் இத்தாலியில் உள்ள இலங்கையர்கள்.
இத்தாலியில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விமான நிலையத்திற்கு வந்தபோதிலும் அங்கிருந்து இலங்கை வர விமானம் இல்லாததினால் விமான நிலையத்தில் பிள்ளைகளுடன் செய்வது அறியாமல் தவிப்பதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவேற்றம் செய்து மனக்கவலையை வெளியிட்டுள்ளனர்.