முதல் கொரோனா நோயாளி பூரணகுணம்: வீடும் திரும்பினார்

இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட முதலாவது இலங்கைப் பிரஜை குணமடைந்து இன்று திங்கட்கிழமை வீடு திரும்பியுள்ளார்.

கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

கொழும்பு புறநகரான கொட்டாவ – மத்தேகொடயைச் சேர்;ந்த இவர் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக தொழில்செய்துவரும் நிலையில்; கடந்த 11ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு ஆளாகிய நிலையில் ஐ.டி.எச் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இத்தாலியிலிருந்துவந்த பயணிகளுக்கே இவர் சேவை வழங்கியிருந்தார்.

இவரது சாரதியாக தொழில்புரிந்தவரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். அவர் தொடர்பான விவரம் இதுவரை வெளிவரவில்லை.

You May also like