நேபாளத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பல்கலைக்கழகங்கள் அதிரடியாக மூடப்பட்டதை அடுத்து அங்கு கல்விகற்ற இலங்கை மாணவர்கள் 100 பேர் நாடு திரும்பமுடியாமல் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொக்காரா நகரிலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகம் உட்பட சகல பல்கலைக்கழங்களையும் நேபாள அரசு மூடியது.
இதனால் அங்கு கற்கின்ற மாணவர்கள் வீடு திரும்புகின்ற நிலையில், இலங்கை மாணவர்கள் பாரிய நெருக்கடியை சந்தித்திருக்கின்றனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டிருப்பது இன்னும் பாரிய சிக்கலை அந்த மாணவர்களுக்கு ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.