கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஹோமாகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவர் அங்கிருந்து தம்பிச் சென்றுள்ளார்.
இதனை அடுத்து விரைந்து செயற்பட்ட அதிகாரிகள் அவரை பிடித்து மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அந்த மருத்துவமனையில் தனக்கு திருப்தி இல்லை என்று குறித்த நபர் கூறியதால், அவர் பானந்துறை அரச மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.