நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது?

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் அழைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவிட்-19 வைரஸ் தீவிரமாக பரவலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்காக நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாக அரச தகவல்கள் கூறுகின்றன.

மேலும் அரச செலவீனங்களை ஈடுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் புதிய பிரேரணைகளை முன்வைக்கவும் அரசாங்கம் எண்ணிருக்கின்றது என்று அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

You May also like