ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், கொழும்பு மாவட்ட மக்களுக்கு இலவசமாக பாண் விநியோகம் செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெளிக்கடை சிறை கைதிகளால் நடத்தும் பேக்கரி ஊடாக தனியார் நிறுவனம் ஒன்று இணைந்து இதனை முன்னெடுத்துள்ளது.
கடந்த 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் ஊடாக கிராண்ட்பாஸ், மட்டக்குளி உள்ளிட்ட இடங்களில் பாண் விநியோகம் இடம்பெறுகின்றன.