கொரோனா:இலங்கையின் அடுத்தவாரம் குறித்து அமெரிக்கா அதிர்ச்சி அறிக்கை

இலங்கையில் அடுத்த வாரத்தில் கொரோனா வைரஸ் மேற்கொள்ளப்போகும் உருத்திரத் தாண்டவம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ஆய்வுப் பல்கலைக்கழங்களில் ஒன்றான ஜோன்ஸ் ஹோப்கிங்;ஸ் என்கிற பல்கலைக்கழகம் இந்த அறிக்கையை அம்பலப்படுத்தியுள்ளது.

அறிக்கைக்கு அமைய, அடுத்தவாரத்தில் இலங்கையில் புதிதாக 244 கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படலாம் என்கிற எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுதல் குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகம், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை விடவும் ஆரம்ப 20 நாட்களில் இலங்கையில் தீவிரமாக வைரஸ் பரவியிருக்கின்றது என்றாலும் தற்போது அமெரிக்காவின் நிலைமை படுமோசமாகிவிட்டது என்று குறிப்பிட்டிருக்கின்றது.

அமெரிக்காவில் ஆரம்ப 20 நாட்களில் 20 பேரே கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்தனர்.

பிரிட்டனில் 9 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஆனாலும் இலங்கையில் கடந்த 20 நாட்களில் 150 பேர் இனங்காணப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

You May also like