கொரானாவின் தாக்குதலில் பலியான நபரால் 300 பேருக்கு ஏற்பட்ட நிலை!

கொழும்பு – மருதானையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்த நபரின் உறவினர்கள் இருவருக்கும் அந்த தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரது பேரன் மற்றும் மருமகனுக்கே இவ்வாறு தொற்று பரவியிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள கொரோனா தடுப்பு படையணியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து பேசிய அவர், குறித்த நபர் வாழ்ந்த பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறினார்.

You May also like