சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கையிலிருந்து தப்பிச்சென்ற 23 பேரை கடற்படை புலனாய்வுப் பிரிவு இன்று வியாழக்கிழமை அதிரடியாக மடக்கிப் பிடித்திருக்கிறது.
கம்பஹா மாவட்டம் ஜா-எல, சுதுவெல்ல பிரதேசத்தில் இவர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஜா-எல் கத்தோலிக்க ஆலயத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் தனிமைப்படுத்தல் முகாம் ஒன்றுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.